பழனி 29 நாள் உண்டியல் வசூல் ரூ.89 லட்சம்
பழனி: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் உண்டியலில் கடந்த 29 நாட்களில் ரூ. 89 லட்சம் அளவுக்கு பக்தர்களின் காணிக்கை வசூலாகியுள்ளது. 5,000 கிலோ நெல்லும் காணிக்கையாக தரப்பட்டுள்ளது.
முருகனின் 3ம் படை வீடான பழனி தான் தமிழகத்திலேயே அதிக வருமானம் ஈட்டக் கூடிய கோவிலாக திகழ்கிறது.
இந்த கோவிலின் உண்டியல் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் எண்ணப்பட்டது. கோவில் பிரதான கார்த்திகை மண்டபத்தில் இந்தப் பணி நடந்தது.
இதில் ரூ. 83 லட்சத்து 39 ஆயிரத்து 128 பணம் இருந்தது. ஒரு பக்தர் ரூ. 5 லட்சத்தை ஒரே கட்டாக கட்டி செலுத்தியிருந்தார். இதுதவிர 906 கிராம் தங்கம் (வேல், மோதிரம், சங்கிலி, டாலர்கள் என பல்வேறு வடிவில்),
13 ஆயிரத்து 35 கிராம் வெள்ளிப் பொருட்கள், அமெரிக்க, சிங்கப்பூர் நாட்டு கரன்சி நோட்டுக்கள் ஆகியவையும் இருந்தன.
இதுதவிர நவ தானிய காணிக்கைக் கிடங்கில், 5,463 கிலோ நெல் மற்றும் இதர தாணியங்கள் காணிக்கையாக கொடுக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications