எழுத்தாளர் சுஜாதா உடல் தகனம்

Subscribe to Oneindia Tamil

Sujatha
சென்னை: மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. திரையுலகினர், இலக்கியத் துறையினர், பல்துறையைச் சேர்ந்த பெரும் திரளானோர் சுஜாதாவுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 27ம் தேதி சென்னையில் மரணமடைந்தார் எழுத்தாளர் சுஜாதா. அவரது உடல் தகனம் இன்று சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடந்தது.

முன்னதாக இன்று காலை முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, ஷங்கர், எழுத்தாளர் பாலகுமாரன், கவிஞர் கனிமொழி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் சுஜாதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சுஜாதாவின் 2வது மகன் இன்று காலை தான் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையின் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த சுஜாதாவின் உடல் அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னர் இறுதி ஊர்வலம் கிளம்பியது. இதில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் சுஜாதாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+