சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிரடி சோதனை
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி ரெய்டு நடத்தினர். நள்ளிரவில் நடந்த இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலைய வர்த்தகப் பிரிவில் இந்த சோதனை நடந்தது.
சென்னை விமான நிலைய வர்த்தகப் பிரிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக சிபிஐக்கு ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக தொலைபேசி பூத்துகள், ஓட்டல்கள், கார் பார்க்கிங் காண்ட்ராக்ட்டை புதுப்பித்தல் போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் வந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.
வர்த்தகப் பிரிவில் ஒவ்வொரு அறைக்கும் சென்று சோதனை நடத்தி அப்போது பல முக்கிய தஸ்தாவேஜுகள், ஒப்பந்தம் தொடர்பான ஏராளமான சிடிக்களை கைப்பற்றினர்.
இரு வாரங்களுக்கு முன்பு ஐதராபாத் விமான நிலையத்தில் இதேபோல சிபிஐ ரெய்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications