நண்பன் கொலை-டென்னிஸ் மைதானத்தில் பிணம் புதைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது நண்பனை கொலை செய்து பிணத்தை டென்னில் மைதானம் அருகே புதைத்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சரவணன் (25), தரணி இருவரும் சிறு வயது முதலே கூட்டாக திருட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன. பலமுறை கைதாகியுள்ளனர்.

சரவணன் 2 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவன். கடந்த டிசம்பரில் தான் சிறையிலிருந்து விடுதலையானான்.

இந் நிலையில் கடந்த 28ம் தேதி தரணியை சந்திக்க சென்றான். அதன் பின்னர் திரும்பி வரவே இல்லை.

இதையடு்த்து அவனது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சரவணனை தரணியே கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது.

பிணத்தை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தை ஒட்டி புதைத்து விட்டதாக திடுக்கிடும் தகவல் தந்தான் தரணி.

இதையடுத்து வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் சரவணனின் பிணத்தை தோண்டி எடுக்கவுள்ளனர். இருவருக்கும் பணப் பிரச்சனையில் சண்டை ஏற்பட்டதால் இந்தக் கொலை நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+