துபாய்: குடித்து விட்டு கார் ஓட்டினால் சிறை- ரூ2 லட்சம் அபராதம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடித்து விட்டு கார் ஓட்டினால் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துபாய் போக்குவரத்துப் பிரிவு இயக்குநர் முகம்மது சைப் அல் சபீன் கூறுகையில், புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து குற்றங்களுக்கு கருப்புப் புள்ளி முறை அமலுக்கு வருகிறது.
துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது. விபத்துக்களைக் குறைக்கும் வகையில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி மது போதையில் கார் ஓட்டினால் அவர்களுக்கு ரூ. 2லட்சம் அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
கடந்த ஆண்டு மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1056 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications