For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வார்-கூறுகிறார் டக்ளஸ்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கம் சிதறி விட்டது. விரைவில் பிரபாகரனை ராணுவம் நெருங்கி விடும். ஆனால் அவர் உயிருடன் பிடிபட மாட்டார். தற்கொலை செய்து கொள்வார் என்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் குறிக்கு பலமுறை தப்பியவர் டக்ளஸ். அரசுக்கு ஆதரவாக இவர் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்திய ராணுவத் தாக்குதல் குறித்து டக்ளஸ் கூறுகையில், பிரபாகரனுக்கு இப்போது வேறு வழியில்லை. அவரை ராணுவம் நெருங்கி விட்டது. விரைவில் அவரை பிடித்து விடுவார்கள். ஆனால் அவர் உயிருடன் பிடிபட மாட்டார். தற்கொலை செய்து கொண்டு விடுவார்.

அவரைப் போன்றவர்களுக்கு அதுதான் முடிவாக அமையும் என்று கூறியுள்ளார் டக்ளஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X