For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

67 மூடை பேட்டரிகள் பறிமுதல்: புலிகளுக்கு கடத்தல்!

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்ட 67 மூடை பேட்டரிகளை கடலோரக் காவல் படையினர் இன்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடலோரக் காவல் படையினரும், தமிழ போலீஸாரும் தொடர்ந்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வழக்கம் போல கடலோரக் காவல் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கைக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையில் உள்ள முயல் தீவுப் பகுதியில் ஒரு படகு வேகமாக சென்றதைப் பார்த்தனர்.

விரைந்து சென்ற கடலோரக் காவல் படையினர் அந்தப் படகை நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது படகில் 67 மூடைகளில் பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது. விடுதலைப் புலிகளுக்கு அவை கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அவற்றைக் கைப்பற்றிய கடலோரக் காவல் படையினர் படகில் இருந்த 3 பேரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X