For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலாத்காரம் செய்து சிறுமி கொடூரக் கொலை-வாலிபர் கைது

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் செக்ஸ் சித்ரவதை மூலம் சிறுமியை கொலை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த வேல்ராஜ்-பேச்சியம்மாள் தம்பதியினரின் மகள் சந்தனமாலதி (4). கடந்த 27ம் தேதி விளையாடச் சென்ற மாலதி வீடு திரும்பவில்லை.

அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமி மாலதியை தேடிவந்த போது, அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சிறுமியின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பார்த்தபோது, அது காணாமல் போன சந்தனமாலதி எனத் தெரியவந்தது.

பிரேத பரிசோதனையில் மாலதியின் கழுத்தில் காயங்களுடன் செக்ஸ் சித்ரவதை செய்யப்பட்டு கொலையாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பாலமுருகனை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் பாலமுருகன் கிராம நிர்வாக அதிகாரி செல்லப்பாவிடம் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில்,

நான் எனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தேன். சம்பவத்தன்று மாலதிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து அங்குள்ள குளத்து பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தேன்.

பின்னர் கழுத்தை நெறித்தேன். இதில் அவள் இறந்துவிட்டாள். உடனே அவளை குளத்துக்குள் போட்டுவிட்டு வந்து விட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X