மின் தடை-வழக்கு தொடர விசைத்தறியாளர்கள் முடிவு
Subscribe to Oneindia Tamil
சேலம்:அரசின் மின் உபயோகத் தடையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக விசைத்தறி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
தொடரும் மின்சாரப் பற்றாக்குறையை சமாளிக்க, வாரத்தில் ஒரு நாள் தொழிற்சாலைகள் மின்சாரத்தை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது.
மேலும் தினமும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை மின்சாரம் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்ததது.
இந் நிலையில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சேலம் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், இந்த மின்சாரத் தடையை விலக்கிக் கொள்ளுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், மின் உபயோகத் தடையை எதிர்த்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அனைத்து விசைத்தறி சங்கங்களும் இணைந்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம் என்றனர்.












Click it and Unblock the Notifications