சந்தேகத்துக்குரிய கேரள வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு
பாவூர்சத்திரம்:சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த கேரள வாலிபர்களை கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ளது பெத்தநாடர்பட்டி கிராமம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து 2 பேர் இங்கு வந்தனர். அவர்களுடன் ஒரு சிறுவனும் வந்திருந்தான்.
அவர்கள் கையில் எலுமிச்சைபழம் மற்றும் பூஜைக்குரிய பொருட்களை வைத்திருந்தனர். அங்குள்ள ஒரு தோட்டத்தில் அவர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். இவர்களை பார்த்து சந்தேகம் அடைந்த விவசாயி, அவர்களிடம் விசாரித்தார். முன்னுக்கு பின் முரணான அவர்கள் பதிலளித்தனர்.
அந்த சிறுவனை கேரளாவில் இருந்து அழைத்து வந்திருப்பது தெரிய வந்தது. சிறுவன் அவர்களை பார்த்து அழுதுகொண்டே இருந்ததால், விவசாயிக்கு சந்தேகம் வலுத்தது. அப்பகுதி மக்களிடம் விவரத்தை கூறினார்.
கிராம மக்கள் திரண்டு வருவதை பார்த்த கேரள வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். கிராம மக்கள் விரட்டிச் சென்று அவர்களை பிடித்தனர். அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த நெடுஞ்சாலைத் துறை போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications