மனைவியை கொன்ற கணவன் கைது
சங்கரன்கோவில்: மலை உச்சிக்கு அழைத்து சென்று மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நடராஜபுரம் தெருவை சேர்ந்தவர் கண்ணன். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களாகிறது.
கவிதா திரூவாரூர் மாவட்டத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வரதட்சனை பிரச்னை தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கண்ணனின் குடும்பத்தினர் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் மலையில் உள்ள காரி சாத்தான் மலையப்பசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். கண்ணனும் கவிதாவும் சென்றனர்
உறவினர்கள் அனைவரும் கோவிலில் நிழச்சியை முடித்து விட்டு கீழே இறங்கினார்கள். நீங்கள் முதலில் போங்கள் நானும் கவிதாவும் பிறகு வருகிறோம் என்று கூறினார். அவர்களும் சென்றுவிட்டனர். கவிதாவை அழைத்துக் கொண்டு கண்ணன் மலை உச்சிக்கு சென்றார். அங்கு கவிதாவின் தலையில் கல்லை போட்டார். கவிதா அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
அழுதவாறு மலை அடிவாரத்திற்கு ஓடிவந்த கண்ணன், மனைவி கவிதா மலைஉச்சியில் நின்றிருந்தபோது தவறி விழுந்து இறந்துவிட்டாள் என்று கதறினார். இதை நம்பிய அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கரிவலம்வந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து சென்று விசாரனை நடத்தினர். அப்போது கவிதாவின் உடலில் தலையில் மட்டும் காயம் இருந்தது. வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கவிதாவின் கணவர் கண்ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது மனைவியை கொலை செய்ததை கண்ணன் ஓப்புக் கொண்டார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications