சாராய ஏக்கத்தில் நாக்கை கடித்த கைதி !
Subscribe to Oneindia Tamil
சேலம்: சாராய ஏக்கத்தில் நாக்கை கடித்த கைதியை போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம் பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்த கன்னியப்பனின் மகன் முருகன். சாராய வியாபாரியான இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
முருகனுக்கு தினசரி குடிக்கும் பழக்கம் உண்டு. சிறையில் அடைக்கப்பட்டதால் அவரால் குடிக்க முடியவில்லை. இதனால் சாராயத்துக்கு ஏங்கிப்போன முருகன் தனது நாக்கை வேண்டுமென்றே கடித்துக் கொண்டார். இதில் நாக்கு துண்டானதால் அவரது வாயில் இருந்து நிறைய ரத்தம் கொட்டியது.
தகவல் அறிந்த சிறை காவலர்கள் முருகனை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications