சைக்கிள் தகராறில் 10 வயது சிறுவன் எரித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில், கார் மோதி தனது சைக்கிள் சேதமடைந்ததற்காக நஷ்ட ஈடு கேட்ட 10 வயது சிறுவனை ஒரு கும்பல் எரித்துக் கொடூரமாக கொலை செய்தது.

டெல்லி அருகே உள்ள அலிபூர் என்ற இடத்தில், இந்த சம்பவம் நடந்தது. மீரட்டிலிருந்து ஒரு திருமண கோஷ்டியினர் அலிபூர் வழியாக சென்றனர்.

அப்போது அந்த வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவன் சஞ்சீவ் மீது திருமண கோஷ்டியினரின் ஒரு கார் மோதியது. இதில் சைக்கிள் சேதமடைந்தது. இதையடுத்து சைக்கிளை சரி செய்ய பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளான் சஞ்சீவ்.

இதனால் ஆத்திரமடைந்த, அந்தக் காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் சஞ்சீவை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவனை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து சஞ்சீவின் எரிந்து போன உடலை அப்பகுதியினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அலிபூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்கள் அப்பகுதியில் போராட்டத்தில் குதித்தனர்.

விரைந்து வந்த போலீஸார் இரண்டு டாக்சி டிரைவர்கள் உள்பட 5 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+