பிசுபிசுப்பு-விமான நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி: கடந்த 2 நாட்களாக நடந்து வந்த விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் தனியார் ஒத்துழைப்புடன் புதிய அதி நவீன விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது அங்குள்ள பழைய விமான நிலையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.
இதை எதிர்த்து இந்திய விமானநிலைய ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நாடு முழுவதும் 2 நாட்களுக்கு முன்பு காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.
இதன் காரணமாக விமான போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. விமான நிலையங்களில் துப்புறவுப் பணிகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. இதனால் போராட்டம் பிசுபிசுத்தது.
இந் நிலையில் நேற்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலுடன், ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக ஊழியர்கள் அறிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரபுல் படேல் பேசுகையில், பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு விட்டன. அவை இயங்கித்தான் ஆக வேண்டும்.
அதேசமயம், சட்டத்திற்கு உட்பட்டு, ஊழியர்களின் நலன் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். பழைய விமான நிலையங்களை மூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் படேல்.
ஹைதராபாத் விமான நிலையம் இன்று திறப்பு:
இதற்கிடையே, புதிதாக, அதி நவீனமாக, தனியார் ஒத்துழைப்புடன் (பப்ளிக், பிரைவேட் - பிபிபி மாடல்) கட்டப்பட்டுள்ள விமான நிலையம் இன்று திறக்கப்படுகிறது.
இந்த விமான நிலையத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர் ரெட்டி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
அதேசமயம், பெங்களூர் விமான நிலையத் திறப்பும் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
-
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
ஒடுக்கப்படும் தென்னிந்தியாவின் குரல்? 850ஆக உயரும் லோக்சபா தொகுதிகள்.. வடமாநிலங்களின் மெகா ஆதிக்கம் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications