பிசுபிசுப்பு-விமான நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி: கடந்த 2 நாட்களாக நடந்து வந்த விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் தனியார் ஒத்துழைப்புடன் புதிய அதி நவீன விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது அங்குள்ள பழைய விமான நிலையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.
இதை எதிர்த்து இந்திய விமானநிலைய ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நாடு முழுவதும் 2 நாட்களுக்கு முன்பு காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.
இதன் காரணமாக விமான போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. விமான நிலையங்களில் துப்புறவுப் பணிகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. இதனால் போராட்டம் பிசுபிசுத்தது.
இந் நிலையில் நேற்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலுடன், ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக ஊழியர்கள் அறிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரபுல் படேல் பேசுகையில், பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு விட்டன. அவை இயங்கித்தான் ஆக வேண்டும்.
அதேசமயம், சட்டத்திற்கு உட்பட்டு, ஊழியர்களின் நலன் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். பழைய விமான நிலையங்களை மூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் படேல்.
ஹைதராபாத் விமான நிலையம் இன்று திறப்பு:
இதற்கிடையே, புதிதாக, அதி நவீனமாக, தனியார் ஒத்துழைப்புடன் (பப்ளிக், பிரைவேட் - பிபிபி மாடல்) கட்டப்பட்டுள்ள விமான நிலையம் இன்று திறக்கப்படுகிறது.
இந்த விமான நிலையத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர் ரெட்டி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
அதேசமயம், பெங்களூர் விமான நிலையத் திறப்பும் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications