சத்தியமங்கலம்- ரயில் திட்டம் கோரி உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ரயில் திட்டத்தை நிறைவேற்றக் கோரி மத்திய இணையமைச்சர் இளங்கோவன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந்த் திட்டத்தை வலியுறுத்தி நீண்ட காலமாக பல வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனாலும் இத் திட்டத்துக்கு இன்னும் உயிர் கிடைக்கவில்லை.
இந் நிலையில், ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி மேட்டுப்பாளையம்-சத்தி-சாம்ராஜ்நகர்- பெங்களூர் ரெயில் இணைப்புத்திட்டம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சத்தியமங்கலத்தில் கடையடைப்பு போராட்டமும் நடந்தது.
இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இதை அமைச்சர் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
தமிழக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications