பஞ்சாயத்து தலைவியின் கணவருக்கு கடி!
Subscribe to Oneindia Tamil
சுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே பஞ்சாயத்துத் தலைவியின் கணவரைக் கடித்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சுரண்டை அருகே உள்ள குலையநேரி பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் சீதாலெட்சுமி.. இவரது கணவர் பாலமுருகன். முன்னாள் தலைவராக இருந்தார். அம்மையார்புரத்தில் எம்எல்ஏ நிதியிலிருந்து ரூ.3.5 லட்சத்தில் தார் சாலை வேலை நடந்து வருகிறது.
அப்போது ஆனைக்குளத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் வைகுண்டமணி, சுப்பிரமணியன் மகன் கடற்கரை ஆகிய இருவரும் வந்து பணி நடக்க கூடாது என தகராறு செய்தனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் வைகுண்ட மணி, பாலமுருகனை கடித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வைகுண்ட மணியை கைது செய்து தப்பியோடிய கடற்கரையை தேடி வருகிறார்.












Click it and Unblock the Notifications