முதல்வர் வீட்டுக்குள் ஊடுருவ முயன்ற வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் ஊடுருவ முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இன்று காலையில் குடிபோதையில் இருந்த ஒரு வாலிபர் கருணாநிதி வீட்டுக்குள் புகுந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர் ஜெயலலிதாவை கைது செய்' என்று கோஷம் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வாலிபரை போலீசார் ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை நடத்தினார்.
அதில், அவர் குளித்தலையை சேர்ந்த பிரபாகரன் (22) என்பதும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அவரது குடும்பத்தினரை போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications