இத்தாலியில் காந்தி சிலை திறப்பு

Subscribe to Oneindia Tamil

Mahatma Gandhi statue in Italy
லண்டன்: மகாத்மா காந்தியின் பெரிய அளவிலான மார்பளவுச் சிலை இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் திறந்து வைக்கப்பட்டது.

வெண்கலத்தால் ஆன இந்த சிலை, நேப்பிள்ஸ் நகரில் உள்ள விர்ஜிலியானோ பூங்காவின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழாவில் இத்தாலிக்கான இந்தியத் தூதர் ராஜீவ் டோக்ரா, நேப்பிள்ஸ் நகர மேயர் ரோஸா லெர்விலானோ ருஸ்ஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஸோரியா காந்தி கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியரும் பெரும் திரளாக இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ருஸ்ஸோ பேசுகையில், இத்தாலி மக்களும், நேப்பிள்ஸ் மக்களும் அமைதியை விரும்புபவர்கள். வன்முறை மீது நம்பிக்கை இல்லாதவர்கள். அப்படிப்பட்டவர்கள் வாழும் நாட்டில், நகரில், காந்தியின் சிலை திறக்கப்படுவது சிறப்பானது என்றார்.

இந்திய கலாச்சார உறவுக் கவுன்சில் இந்த சிலையை வைக்க ஏற்பாடு செய்தது. இந்தியாவைச் சேர்ந்த சிற்பி கெளதம் பால் இந்த சிலையை செதுக்கியுள்ளார்.

பால், மிலன் நகரில் உள்ள கலைக் கல்லூரியில்தான் சிற்பக் கலையில் டிப்ளமோ பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில், 15க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மகாத்மாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுளாக காந்தியை மையமாக வைத்து கவிதைப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், விவாதங்கள் உள்ளிட்டவை நடந்து வருவதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+