சந்திரிகா தம்பி அனுரா பண்டாரநாயகே மரணம்
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தம்பியும், முன்னாள் அமைச்சருமான அனுரா பண்டாரநாயகே மரணமடைந்தார்.
இலங்கையின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகேவின் மகனும், சந்திரிகா குமாரதுங்காவின் தம்பியுமான அனுரா பண்டாரநாயகே முன்னாள் அமைச்சர் ஆவார். அனுராவின் தந்தை சாலமோன் பண்டாரநாயகேவும் பிரதமராக இருந்தவர்.
ஆளும் இலங்கை சுதந்திரா கட்சியின் மூத்த துணைத் தலைவராக இருந்து வந்தார் அனுரா.
சிறிது காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அனுரா, 2 நாட்களுக்கு முன்புதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மாலை 4.15 மணியளவில் கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 59.
1977ம் ஆண்டு நுவரேலியா மாவட்டத்திலிருந்து எம்.பியாக ேதர்ந்தெடுக்கப்பட்டு அரசியலுக்கு வந்தார் அனுரா. பல்வேறு அமைச்சர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
2002ம் ஆண்டு நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்தார். 2005ம் ஆண்டு சந்திரிகா அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் ராஜபக்சே அமைச்சரவையில் தேசிய பாரம்பரியத்துறை அமைச்சராக செயல்பட்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து விலகி விட்டார்.