காவல் அதிகாரிகளுடன் கருணாநிதி அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் திரிபாதி, உள்துறைச் செயலாளர் மாலதி, டிஜிபி ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயக்குமார், சென்னை, மதுரை, கோவை, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கோஷ்டி மோதல்கள், ஜாதிக் கலவரங்கள், கொலை, கொள்ளை போன்றவற்றை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications