வங்கியில் ரூ.8 லட்சம் மோசடி-பெண் ஊழியர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கியில் ரூ. 8 லட்சம் கையாடல் செய்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சாந்த குமாரி (52) ஆதம்பாக்கத்தில் ஒரு வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.
தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் 82 பேர் கட்டணத்தை இந்த வங்கியில் செலுத்தினர். ஆனால், இதை கல்வி நிறுவன கணக்கில் காட்டாமல் அந்தப் பணத்தை சாந்தகுமாரி சுருட்டினார்.
மேலும் ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் கட்டிய பணத்தையும் கையாடல் செய்துள்ளார். மொத்தம் ரூ. 8 லட்சம் வரை அவர் கையாடல் செய்துள்ளார்.
இதைக் கண்டுபிடித்த வங்கி மேலாளர் வைத்தியநாதன் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சாந்த குமாரியை கைது செய்தனர். அவரை சஸ்பெண்ட் செய்யவும் அந்த வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications