மெரீனா கடற்கரையில் நடு ரோட்டில் எரிந்த அரசு கார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெரீனா கடற்கரை அருகே இன்று நடு ரோட்டில் அரசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மெரீனா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் இன்று காலை ஒரு அரசு கார் வந்து கொண்டிருந்தது. மாநிலக் கல்லூரி சிக்னலில் கார் நின்றபோது திடீரென என்ஜின் பகுதியிலிருந்து குபுகுபுவென புகை வந்தது.
இதையடுத்து கார் டிரைவர் வேகமாக வெளியேறினார். அடுத்த சில விநாடிகளில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அந்த சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்தில் கார் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது.
இந்தக் கார் தலைமைச் செயலகத்திலிருந்து வந்ததாக தெரிகிறது. கார் தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications