போலி பாஸ்போர்ட்-திருச்சியில் இலங்கை தம்பதி கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் கொழும்பு செல்லும் விமானத்தில் ஏற வந்த ஒரு தம்பதி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முத்துராமலிங்கம் (58), அவரது மனைவி மகேஸ்வரி (53) என்றும் கடந்த 1984ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்துள்ளனர் என்றும் தெரியவந்தது.
மேலும் தற்போது போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றுள்ளனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications