For Daily Alerts
Just In
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது
மதுரை: மதுரையில் வெளி மாநில லாட்டரிகளை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. வெளி மாநில லாட்டரிகளை தமிழகத்தில் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆரப்பாளையம் பஸ் நிலையம், பெரியார் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், பழங்கானத்தம் பஸ் நிலையம் போன்ற பல இடங்களில் லாட்டரி விற்பனை திருட்டுத் தனமாக விற்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த எஸ்எஸ் காலனி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், ஒரு வீட்டில் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு வெளிமாநில லாட்டரி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக கமல் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து வெளிமாநிலத்தைச் சேர்ந்த 10,500 லாட்டரி சீட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Comments
Story first published: Monday, March 24, 2008, 14:18 [IST]