குஜராத் கலவரம்: மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் புது உத்தரவு

இந்தக் குழுவில் சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சத்பதி ஆகியோர் இடம் பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு புலனாய்வுப் படை தனது விசாரணை அறிக்கையை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அரிஜித் பசாயத் தலைமையிலான 3 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதுதவிர கலவரம் தொடர்பாக இதுவரை விசாரிக்கப்படாத அல்லது சாட்சியம் சொல்லாத அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். ஏற்கனவே சாட்சியம் சொன்னவர்களை தேவைப்பட்டால் மீண்டும் அழைத்து விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் தொடர்ச்சியாக குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அசன் ஜாப்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரோடு தீவைத்துக் கொளுத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் மற்றும் நரோடாவில் நடந்த மாபெரும் படுகொலை உள்ளிட்ட மாநிலத்தில் 7 இடங்களில் நடந்த 10 கலவரங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கவே உச்சநீதிமன்றம் இந்தப் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications