மழை ஓய்ந்தது-கடலுக்கு திரும்பிய மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தமிழகத்தில் மழை குறைந்ததையடுத்து 12 நாட்கள் கழித்து இன்று தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் தூத்துக்குடியில் உள்ள விசைப் படகுகள் மற்றும் நாட்டுப்புற படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தற்போது மழை குறைந்துள்ள நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள 850 விசைப்படகு மீனவர்களும், 350 நாட்டு படகு மீனவர்களும் மீன் பிடிக்க இன்று கடலுக்கு உற்சாகமாகச் சென்றனர்.
மழை தாக்கம் குறைந்ததையடுத்து மீனவப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications