அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகம் முழுவதும் பிரச்சனைக்குரிய பகுதிகளில் கட்சி அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுபாப்பு வழங்க அரசு உத்தரவி்ட்டுள்ளது.
மாவட்ட தலைநகர்கள், மற்றும் ஒன்றியம், நகரம் போன்ற பகுதிகளில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது திடீர் தாக்குதல்கள் நடந்தன.
தற்போது தமிழக சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில் பிரச்னைக்குரிய மாவட்டம், நகரம், ஒன்றியப் பகுதிகளில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications