வட தமிழத்தில் இன்று கன மழை பெய்யும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மன்னார் வளைகுடாவின் வளிமண்டலப் பகுதியில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட பகுதிகளில் இன்று பல இடங்களில் கன மழையும், தென் தமிழகத்தில் பரவலாக மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில், மன்னார் வளைகுடா பகுதியில், கேரளா மற்றும் கன்னியாகுமரி கடல்பகுதியில், வளிமண்டலத்திற்கு மேலே, புதிய காற்றழுத்த சுழற்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வட தமிழகத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் கன மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும். அதேபோல தென் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் எனவும், லேசான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications