For Daily Alerts
Just In
டெல்லியில் நிலநடுக்கம்-மக்கள் ஓட்டம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு ஓடினர்.
டெல்லியில் இன்று மதியம் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 10 விநாடிகளுக்கு நீடித்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. பொருட்கள் ஆடின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர். மக்களிடம் பெரும் பீதி காணப்பட்டது.
நிலநடுக்கத்தின் அளவு, அதன் மையம் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
Comments
Story first published: Friday, March 28, 2008, 12:57 [IST]