ஊட்டியில் சீசன் தொடக்கம்-நாளை முதல் சிறப்பு மலை ரயில்
ஊட்டி:கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஊட்டியில் குளுகுளு' சீசன் தொடங்கிவிட்டது. இதையடுத்து நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த 2 வாரங்களாக மழை தமிழகத்தை ஒரு பிடி பிடித்தது. மழை குறைந்த நிலையில் வெயிலும் வாட்டத் தொடங்கிவி்ட்டது.
ஊட்டியி்ல் கோடை குளுகுளு சீசனும் தொடங்கிவிட்டது. ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் மலை ரயில்கள் மற்றும் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை (29ம் தேதி) முதல் ஜூன் மாதம் 8ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு ரயில்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 1.50 மணிக்கு வந்து சேரும். ஊட்டியில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு மாலை 3.40 மணிக்கு சென்று சேரும்.
ஊட்டியில் இருந்து குன்னூருக்கு பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும், இதற்காக முன்பதிவு வசதி செய்யப்பட்டு வருகிறது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.