For Daily Alerts
Just In
புதுச்சேரியில் அம்பேத்கருக்கு மணி மண்டபம்
புதுச்சேரி: புதுச்சேரியில் அம்பேத்கர் நினைவு மணி மண்டபம் ஏப்ரல் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் அம் மாநில அரசு சார்பில் அம்பேத்கரை பெருமைபடுத்தும் விதத்தில் நினைவு மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
புதுச்சேரி பொதுப் பணித்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று அம்பேத்கர் மணி மண்டபத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ரூ. 2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மணி மண்டபம் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியன்று திறக்கப்படும் என்றார் அவர்.
Story first published: Sunday, March 30, 2008, 11:39 [IST]