பெங்களூரில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு ரத்து

இதையடுத்து பெங்களூரின் பல பகுதிகளில் தமிழ் சானல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.
தமிழர்களுக்கு எதிரானதல்ல-வேதிகே:
இந் நிலையில் கர்நாடகத்தில் நடக்கும் போராட்டம் தமிழக அரசுக்கு எதிரானதே தவிர தமிழர்களுக்கு எதிரானதல்ல என கர்நாடக ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா கூறியுள்ளார்.
இந்த அமைப்பினர் தான் நேற்று முதல் பெங்களூரில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் குறி்த்து நாராயண கெளடா கூறுகையில்,
கர்நாடகத்தில் நடைபெறும் போராட்டம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. எனவே கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள் அச்சம் அடைய தேவையில்லை. தமிழக முதல்வர் கருணாநிதி, ராமதாஸ் ஆகியோர் கூறிய கருத்துக்கள் தவறானவை. அதற்கு எதிராகத்தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.
இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியான முறையில்தான் நடத்துகிறோம். நடராஜ், பூர்ணிமா, சாரதா உள்பட சில சினிமா தியேட்டர்களில் தமிழ் சினிமா திரையிடக்கூடாது என்று கேட்டுக் கொண்டோம். அதற்கு அந்தந்த சினிமா தியேட்டர் நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்து விட்டனர்.
இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) காந்திநகர் கனிஷ்கா ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கர்நாடக சினிமா துறை, விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த பிரச்சினையில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து இக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்த போராட்டம் தமிழர்களுக்கு, எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இது தமிழக அரசுக்கு எதிரானதே தவிர கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு எதிரானதல்ல என்றார் நாராயண கெளடா.
இதற்கிடையே கன்னட அமைப்புகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் பெங்களூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல ஷிமோகா, சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களிலும் கன்னட அமைப்புகள் சார்பில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications