பெங்களூரில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு ரத்து

இதையடுத்து பெங்களூரின் பல பகுதிகளில் தமிழ் சானல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.
தமிழர்களுக்கு எதிரானதல்ல-வேதிகே:
இந் நிலையில் கர்நாடகத்தில் நடக்கும் போராட்டம் தமிழக அரசுக்கு எதிரானதே தவிர தமிழர்களுக்கு எதிரானதல்ல என கர்நாடக ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா கூறியுள்ளார்.
இந்த அமைப்பினர் தான் நேற்று முதல் பெங்களூரில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் குறி்த்து நாராயண கெளடா கூறுகையில்,
கர்நாடகத்தில் நடைபெறும் போராட்டம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. எனவே கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள் அச்சம் அடைய தேவையில்லை. தமிழக முதல்வர் கருணாநிதி, ராமதாஸ் ஆகியோர் கூறிய கருத்துக்கள் தவறானவை. அதற்கு எதிராகத்தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.
இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியான முறையில்தான் நடத்துகிறோம். நடராஜ், பூர்ணிமா, சாரதா உள்பட சில சினிமா தியேட்டர்களில் தமிழ் சினிமா திரையிடக்கூடாது என்று கேட்டுக் கொண்டோம். அதற்கு அந்தந்த சினிமா தியேட்டர் நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்து விட்டனர்.
இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) காந்திநகர் கனிஷ்கா ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கர்நாடக சினிமா துறை, விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த பிரச்சினையில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து இக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்த போராட்டம் தமிழர்களுக்கு, எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இது தமிழக அரசுக்கு எதிரானதே தவிர கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு எதிரானதல்ல என்றார் நாராயண கெளடா.
இதற்கிடையே கன்னட அமைப்புகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் பெங்களூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல ஷிமோகா, சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களிலும் கன்னட அமைப்புகள் சார்பில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications