பெங்களூரில் தமிழ் நாளிதழ்களுக்கும் தடை!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: தமிழ் சினிமா, சேனல்கள் மீது தாக்குதல் நடத்திய கன்னட அமைப்புகளின் பார்வை இப்போது தமிழ் செய்தித் தாள்கள் மற்றும் பத்திரிகைகள் மீது திரும்பியுள்ளது.
பெங்களூர் மற்றும் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து தமிழ் செய்தித் தாள்களையும் வினியோகிக்கூடாது என சில கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியதன் விளைவாக, இன்று பெங்களூர் தவிர அனைத்து பகுதிகளிலும் தமிழ் செய்தித் தாள்கள் வினியோகம் நிறுத்தப்பட்டது.
நாளை முதல் பெங்களூரிலும் தமிழ் நாளிதழ்கள் வெளியாவதை நிறுத்திவிட வேண்டும் என இந்த அமைப்புகள் மிரட்டியுள்ளதால், மேற்கொண்டு என்ன செய்வது என தமிழ் நாளிதழ் வெளியீட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications