இலங்கை துணைத் தூதருக்கு எதிராக போராட்டம்-சுப.வீ
சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதர் அம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வானொலிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
சென்னையில் இலங்கை துணைத் தூதுவரான அம்சா, தமிழ்நாட்டில் அமர்ந்துகொண்டு எத்தனை குழப்பங்களைச் செய்ய முடியுமோ அத்தனை குழப்பங்களையும் முறையற்ற வழிகளிலே செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக நடைபெற்ற ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், வாரந்தோறும் பத்திரிகையாளர்களை அழைத்து விருந்து என்ற பெயரில் தகாத முறையில் லஞ்சம் கொடுத்து, பத்திரிகையாளர்களின் கண்ணியத்தையும் குறைத்து பொய்யான செய்திகளை வெளியிட அம்சா ஏற்பாடு செய்கிறார் என்று சொல்லியிருந்தார்.
ஒருமுறை தமிழக முதல்வர் கலைஞரை நான் சந்தித்தபோதுகூட அம்சாவை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் டெல்லிக்கு வலிமையாக முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஒரு பொது ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
அம்சா என்கிற அந்த நபர் இங்கே அமர்ந்து கொண்டு எல்லாவித கண்ணியமற்ற- முறைகேடான செயல்களையும் செய்கிறார். உண்மைக்கு மாறான செய்திகளை தமிழகத்திலே பரப்ப முயற்சிக்கிறார்.
எனவே அம்சாவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை மிக விரைவில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் முடிவெடுத்திருக்கிறோம். அதற்கான முயற்சிகளையும் நாங்கள் இப்போது மேற்கொண்டிருக்கிறோம் என்றார் சுப.வீரபாண்டியன்.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!












Click it and Unblock the Notifications