தென் மாவட்டங்களில் பாதுகாப்பு-கண்காணிப்பு அதிகரிப்பு
மதுரை: கர்நாடக வன்முறையைக் கண்டித்து தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் போலீஸ் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்ைத எதிர்த்து கர்நாடகவில் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைக் கண்டித்து தமிழகத்திலும் போராட்டங்கள் சூடு பிடித்துள்ளன.
கன்னட அமைப்பினருக்குப் போட்டியாக தமிழகத்திலும் பஸ்கள் உடைப்பு, கன்னட சங்கங்கள் மீது தாக்குல், ஹோட்டல்கள் மீதுதாக்குதல் என போராட்டம் வெடித்துள்ளது.
மதுரையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழக புக்கிங் அலுவலகத்தை பூட்டி, ஊழியரை சிறை வைத்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னடர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பதட்டமான பகுதிகளில் 24 மணி நேர ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்குக்கு பங்கம் ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக புக்கிங் அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
மைசூர் செல்லும் தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications