Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொண்டு நிறுவனத்துக்கு நிலம் தந்தது செல்லும்- ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் தொண்டு நிறுவனத்துக்கு புறம்போக்கு நிலத்தை தமிழக அரசு குத்தகைக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை முகப்பேரில் நேத்ரோதயா அறக்கட்டளை உள்ளது. வாடகை கட்டடத்தில் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் நொலம்பூர் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கான இல்லத்தை அமைக்க நிலத்தை இலவசமாக வழங்க தமிழக அரசிடம் இந்த அறக்கட்டளை விண்ணப்பித்தது.

இதன்அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள நிலத்தை நேத்ரோதயா அறக்கட்டளைக்கு கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி வருவாய்த்துறையினர் வழங்கினர்.

30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கு ஆண்டு வாடகையாக ரூ.5,000த்தை தொண்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவி்ல் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, திருவள்ளூர் மாவட்டம் ஊராட்சி கவுன்சிலரும் மேற்கு முகப்பேர் கார்டன் குடியிருப்போர் நலச் சங்க செயலாளருமான இமானுவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

சட்டவிரோதமாக நேத்ராலயா தொண்டு நிறுவனத்துக்கு அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக அரசு வெளியிட்ட உத்தரவை ரத்து செய்து நிலத்தை ஒப்படைக்குமாறு தொண்டு நிறுவனத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் இமானுவேல் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், மனுதாரர் இப்போது கவுன்சிலராக உள்ளார். அவரே அரசின் கொள்கைகளை மதிக்காமல் நடக்கிறார். தொண்டு நிறுவனத்துக்கு நிலம் வழங்கியதற்கு ஆட்சேபங்களைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு ஏ-1 நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து தாசில்தார் தலைமையில் விசாரணை நடத்தியபிறகே நிலம் ஒதுக்கப்பட்டது. அப்போதெல்லாம் இந்த மனுதாரர் கருத்து கூறவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதி பால் வசந்தகுமார், மனுதாரர் வழக்கில் எந்த பொதுநோக்கமும் இல்லை. அவர் கவுன்சிலராக இருந்தும் அரசின் கொள்கைகளை ஆதரிக்காமல், ஒரு நல்ல நோக்கத்துக்காக நிலம் வழங்கியதை எதிர்த்துள்ளார்.

எந்த முகாந்திரமும் இல்லாமல் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். தொண்டு நிறுவனத்துக்கு நிலம் வழங்கியதை அந்தப் பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+