மனைவி, குழந்தைகளை கொன்றவருக்கு 3 'ஆயுள்'!!
திருவள்ளூர்: மனைவி மற்றும் இரு குழந்தைகளை கடப்பாறையால் தாக்கி கொடூரமாக கொன்றவருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மணலி பெரிய தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. கடந்த மே மாதம் இவருக்கும் இவரது மனைவிக்கும் வங்கியில் பணம் போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த பார்த்தசாரதி வீட்டில் இருந்த கடப்பாறையை எடுத்து மனைவியை கொடூரமாக தாக்கினார். அதைத் தடுக்க வந்த தனது இரு குழந்தைகளையும் கடப்பாறையால் தாக்கினார். இதில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீஸார் பார்த்தசாரதியைக் கைது செய்து திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
3 கொலைகளுக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ. 6000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications