சென்னை-கோவை-பெங்களூர் புல்லட் ரயில் இயக்க திட்டம்

மும்பை- புனே, மும்பை- அகமதாபாத், சென்னை- கோவை- பெங்களூர்- எர்ணாகுளம், டெல்லி- அமிர்தசரஸ், ஹவ்ரா- ஹால்டியா ஆகிய 5 முக்கிய வழித் தடங்களில் முதல் கட்டமாக புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தப்பட இருப்பதாக ரயில்வே வாரியத் தலைவர் கே.சி.சேனா தெரிவித்தார். புவனேஸ்வரத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவில் அதிவேக புல்லட் ரயில்களை விட பயணிகளிடமிருந்து கோரிக்கை வலுத்து வருகிறது. மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் புல்லட் ரயில் திட்டத்துக்கான வாய்ப்பு குறைவு.
ஆனாலும் புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த சில மாநில அரசுகள் ஆர்வமாக உள்ளன. ஆகவே முதல் கட்டமாக புல்லட் ரயில் திட்டத்தை 5 முக்கிய வழித்தடங்களில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
வருகிற ஆகஸ்ட் மாதம் இதற்காக உலகளாவிய டெண்டர்' விடப்படுகிறது. இந்த ஆய்வுக்கான நிதியை அளிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தயாராக உள்ளன.
பணிகளுக்கான டெண்டர்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். உலக அளவில் தைவான் அதிவேக கார்ப்பரேஷன்' நிறுவனம்தான் தற்போது புல்லட் ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
புல்லட் ரயில் பாதை அமைக்க ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.600 கோடி செலவாகும். இதை தனியார் ஒத்துழைப்புடன்தான் செயல்படுத்த முடியும். சாதாரண மக்களுக்குக் கட்டுப்படியாகாத அளவுக்கு புல்லட் ரயில் கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கக்கூடும் என்றார்.
-
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!












Click it and Unblock the Notifications