நெல்லை, ராமநாதபுரத்தில் மத்தியக் குழு ஆய்வு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை, ராமநாதபுர மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்தியக் குழு இன்று ஆய்வு செய்தது.
தமிழகத்தில் சமீபத்திய மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள் குறித்து மத்திய அரசின் இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா தலைமையிலான 4 பேர் குழு ஆய்வு நடத்தி வருகிறது.
கடலூர், தஞ்சை மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக ஆய்வு நடத்திய மத்தியக் குழுவினர் இன்று நெல்லை, ராமநாதபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லையில் மழை:
இந் நிலையில் நெல்லையில் இன்றும் கன மழை பெய்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பெய்த மழையின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில் மீண்டும் அங்கு கன மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications