கொடநாடு செல்கிறார் ஜெ.-ஒரு மாதம் ரெஸ்ட்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று கொடநாடு எஸ்டேட் செல்கிறார். அங்கு ஒரு மாதம் ஓய்வெடுக்க உள்ளார்.
கடந்த ஆண்டும் கோடை விடுமுறையை கொடநாடு எஸ்டேட்டில்தான் ஜெயலலிதா செலவழித்தார். இந்த ஆண்டும் கொடநாடு செல்கிறார்.
சென்னையிலிருந்து இன்று மதியம் 2 மணிக்கு பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானம் மூலம் கோவை செல்கிறார் ஜெயலலிதா. அவருடன் சசிகலா, இளவரசி உள்ளிட்ட 6 பேர் உடன் செல்கிறார்கள்.
கோவையிலிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்கு கார் மூலம் பயணிக்கிறார் ஜெயலலிதா.
ஒரு மாதத்திற்கு அங்கு ஜெயலலிதா தனது தோழியுடன் தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதிமுக ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் மினி பஸ்களின் கட்டண உயர்வு மற்றும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து நீலகிரியில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
கலெக்டர் அலுவலகம் முன் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பி.எச்.பாண்டியன் தலைமை வகிக்கிறார்.
ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தில் உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications