ஜெ.வை எதிர்த்து கொடநாட்டில் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக எஸ்டேட் உள்ளது. இதற்கு செல்லும் வழியில் கேட் போட்டுள்ளனர். ஆனால் இந்த சாலையைத் தாண்டித்தான் பிற கிராமங்களுக்கு போக வேண்டும்.
ஆனால் கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் கேட் போட்டு மூடி விட்டதால் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், இன்று மாலை கொடநாடு வருகிறார் ஜெயலலிதா. இதையடுத்து இன்று காலை முதல் கொடநாடு ஊராட்சி மன்றத் தலைவர் பொன்தோஸ் தலைமையில், கொடநாடு உள்ளிட்ட கிராமங்களைச் ேசர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் எஸ்டேட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேட்டை அகற்றும் வரை போராட்டம் தொடரும். மாலையில் ஜெயலலிதா வரும்போது அவரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து கொடநாடு எஸ்டேட் பகுதியில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications