இலங்கை ராணுவத் தாக்குதலில் 12 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் நடந்த மோதலில் 11 விடுதலைப்புலிகளும், பொதுமக்கள் தரப்பில் ஒருவரும் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மாகாணப் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா பகுதியில் உள்ள வேடமாகுளம், விநாயகர்குளம் ஆகிய இடங்களில் இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 புலிகள் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணம் அருகே நாகர்கோவிலில் நடந்த சண்டையில் ஒரு விடுதலைப்புலி பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாக இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வெளிஓயாவில் ஒரு விடுதலைப் புலியையும் மற்றும் முகமலை பகுதியில் 2 புலிகளையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக இந்த மையம் தெரிவித்துள்ளது.

வெளிஓயா பகுதியில் நடந்த மற்றொரு மோதலில் 3 விடுதலைப்புலிகள் பலியாயினர். இத்துடன் நேற்று பலியான போராளிகளின் எண்ணிக்கை 11 ஆனது.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் கைத்தடி என்ற இடத்தில் 34 வயது தமிழ் வாலிபரை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+