நடுக் கடலில் தத்தளித்த 8 கேரள மீனவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் தத்தளித்த கேரள மீனவர்கள் 8 பேரை இந்திய கடற்படையினர் காப்பாற்றினர்.
கேரள மாநிலம் ஆழப்புழையை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் ஒரு விசைபடகில் கன்னியாகுமரி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு என்ஜின் பழுதானதால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். மேலும் அவர்கள் படகு காற்று வீசும் திசையில் செல்ல தொடங்கியது.
அப்போது அங்கு வந்த நாயக்தேவி கப்பலில் ரோந்து சென்று கொண்டிருந்த இந்திய கடற்படையினர் அவர்களை மீட்டு தங்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு அவர்களின் படகையும், கப்பல் மூலம் இழுத்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வருகின்றனர். இவர்கள் இன்று காலை தூத்துக்குடி வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications