ஈரோடு-கோவை பாசஞ்சர் ரயில் விபத்திலிருந்து தப்பியது!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த விரிசல் தக்க சமயத்தில் கண்டறியப்பட்டதால் ஈரோடு - கோவை பாசஞ்சர் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
ஈரோடு மாவட்டம், ஈங்கூர் ரயில் நிலையத்தில் இருந்து விஜயமங்கலம் வரை ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஈங்கூர் அருகே தண்டவாளத்தில் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டருந்தது. இதை ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்தனர். உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்போது காலை 7.23 மணிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்த ஈரோடு - கோவை பாசஞ்சர் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications