ராமநவமி: கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி-250 பேர் காயம்
ஹசாரிபாக் (ஜார்க்கண்ட்): ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்ரீராமநவமி கொண்டாட்டத்தின்போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் இறந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஸ்ரீராமநவமி நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் 10 நாள் உற்சவமாக கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. ஜார்கண்ட் மாநிலத்திலும் ஸ்ரீராமநவமி கொண்டாடப்பட்டது. சதார் பகுதியில் நடந்த வீர சாகச விளையாட்டில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தனர்.
வெவ்வேறு பகுதிகளில் நடந்த சுவாமி ஊர்வலத்தின்போது கூட்ட நெறிசலில் சிக்கி இளம் பெண் உள்பட 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications