Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெடிகுண்டு பதுக்கியதாக பொடா வழக்கு-நக்கீரன் கோபால் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபால் மீது தொடரப்பட்ட பொடா வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2001ம் ஆண்டு சத்தியமங்கலம் காட்டில் ராஜாமணி என்ற போலீஸ் உளவாளி கொல்லப்பட்டார். இதையடுத்து போலீஸார் நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து உளவாளி கொலையில் தொடர்புடையதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மேலும், அவரது இருப்பிடத்திலிருந்து நாட்டுத் துப்பாக்கி, தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்புகளின் துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து குண்டுகள் வைத்திருந்ததாக கூறி கோபால் மீதான வழக்கு பொடா வழக்காக மாற்றப்பட்டது.

இந்த வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோபால் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்ைல என்று நீதிபதி தியாகராஜன் தீர்ப்பளித்து கோபாலை விடுவித்து உத்தரவிட்டார்.

முன்னாள் திமுக எம்.பி. சண்முகசுந்தரம் கோபால் சார்பில் இந்த வழக்கில் ஆஜரானார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+