மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் உண்டியல் கொள்ளை
சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ் பெற்ற கபாலீஸ்வரர் திருக்கோவிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த லட்சக்கணக்கான பணத்தை ஒரு கும்பல் திருடிய சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலையில் வழக்கமான பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கருவறை வளாகத்தில் உள்ள பெரிய உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கோவில் குருக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்டது. போலீஸார் மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் சகிதம் விரைந்து வந்தனர்.
உடைக்கப்பட்ட உண்டியலில் லட்சக்கணக்கில் பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் சமீப காலத்தில் பெரிய கோவில் ஒன்றில் நடந்துள்ள துணிகர கொள்ளைச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications