இளம்பெண்ணை கேலி செய்தவரின் கை முறிப்பு!
Subscribe to Oneindia Tamil
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே இளம் பெண்ணைக் கேலி செய்தவரின் கை முறிக்கப்பட்டது.
ஆலங்குளம் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி நாயகம். இவரது மகன் தங்கமுத்துமாரி. ஆலங்குளளத்தில் ஓர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் அதே ஊரை சேர்ந்த மாரியப்பன் மனைவியை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்தாராம்.
இந்நிலையில் தங்கமுத்துமாரி பைக்கில் வந்து கொண்டிருந்தபோது மாரியப்பன், அவரது தம்பி சிவனையா. சோமு மகன் கந்தன் ஆகிய 3 பேரும் வழிமறித்து தாக்கினர். இதில் தங்கமுத்துமாரி கை முறித்து படுகாயம் அடைந்தார்.
அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் விசாரணை நடத்தி சிவனையா, கந்தன் ஆகியோரை கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். மாரியப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications