82 வயதில் கட்சி தொடங்கும் சிங்கப்பூர் தமிழ் அரசியல் தலைவர்

சிங்கப்பூரின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் ஜெயரத்தினம். 82 வயதாகும் ஜெயரத்தினம் இலங்கையைப் பூர்வீமாகக் கொண்ட தமிழர் ஆவார்.
மக்கள் நடவடிக்கைக் கட்சியின் ஆதிக்கம் மிகுந்திருந்த நிலையில், 1981ம் ஆண்டு எதிர்க்கட்சி தரப்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகி சாதனை படைத்தவர்.
1981ம் ஆண்டு முதல் 86 வரையிலும், 1997 முதல் 2001 வரையிலும் உழைப்பாளர் கட்சியின் சார்பில் எம்.பியாக பணியாற்றியுள்ளார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் மிகப் பெரிய எதிரியாக அரசியல் நடத்தியவர்.
கடந்த ஆண்டு மே மாதம் இவர் திவால் ஆனதாக சிங்கப்பூர் கோர்ட் அறிவித்தது. இதையடுத்து அவர் அரசியலிலிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பியுள்ளார் ஜெயரத்தினம். சீர்திருத்தக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். கட்சிப் பெயரை பதிவு செய்யவும் அவர் விண்ணப்பித்துள்ளார்.
சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் வரும்போது ஜெயரத்தினத்திற்கு 85 வயதாகியிருக்கும். எனவே இளம் தலைமுறையினருக்கு மத்தியில் இவர் எப்படி போட்டியிட்டு சமாளிக்கப் போகிறார் என்ற ஆர்வம் சிங்கப்பூர் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications