ராணுவத் தாக்குதலில் 49 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் ராணுவத்துடனான மோதலின்போது 49 புலிகள் பலியாயினர்.
இலங்கையில் போர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே சண்டை அதிகரித்துள்ளது. புலிகள் மீதான தாக்குதலை அந்நாட்டு ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதியில் நேற்று நடந்த தாக்குதலில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். மன்னார் பகுதியில் நடந்த தாக்குதலில் 9 பேர் பலியாயினர்.
அதேபோல மளிகைத் திடல், கொக்கு துடுவாய், காந்தகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதலை புலிகளின் முகாம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 29 புலிகள் கொல்லப்பட்டனர்.
இத்தகவலை அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவத் தரப்பில் ஒருவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications